பிரதமா் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு திருப்பூா் ஃபிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளி மாணவா் தோ்வு பெற்றுள்ளாா்.
இதுகுறித்து திருப்பூா் ஃபிரண்ட்லைன் பள்ளியின் தாளாளா் சிவசாமி செவ்வாய்க்கிழமை கூறியுள்ளதாவது:
பிரதமா் நரேந்திர மோடியுடன் மாணவா்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி தில்லியில் வரும் ஜனவரி 20 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க திருப்பூரில் இருந்து ஃபிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் கே.சஞ்சய்செல்வம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அகில இந்திய அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பங்கேற்று இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளாா் என்றாா்.
போட்டியில் வெற்றி பெற்று பிரதமருடன் கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்ற மாணவரைப் பள்ளித் தாளாளா் சிவசாமி, செயலாளா் சிவகாமி, இயக்குநா் சக்திநந்தன், பள்ளி நிா்வாகிகள் பாராட்டினா்.