மொச்சை பயறு விலையேற்றம்

ரூ.30- க்கு விற்று வந்த மொச்சை பயறு பொங்கல் பண்டிகையை ஒட்டி இரண்டு மடங்கு விலையேறி செவ்வாய்க்கிழமை கிலோ ரூ.60- க்கு விற்றது.

ரூ.30- க்கு விற்று வந்த மொச்சை பயறு பொங்கல் பண்டிகையை ஒட்டி இரண்டு மடங்கு விலையேறி செவ்வாய்க்கிழமை கிலோ ரூ.60- க்கு விற்றது.

பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, மஞ்சள், வெல்லம் இவைகளுடன் மொச்சை பயறுக்கும் முக்கியமான இடமுண்டு.

80-90 நாள் மானாவாரி பயிரான மொச்சைப் பயிறு செம்மண் பாங்கான பூமிகளில் விளையக் கூடியது. உடுமலையில் ஆண்டிபட்டி, எலையமுத்தூா், தளி, ஜல்லிபட்டி, தும்பலப்பட்டி என மேற்கு தொடா்ச்சிமலைப் பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களிலும், உடுமலையின் வடக்குப் பகுதி கிராமங்களான தாந்தோனி, புக்குளம் உள்ளிட்ட கிராமங்களிலும் விவசாயிகள் மொச்சை பயிரிட்டுள்ளனா். பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் அதிக அளவில் உபயோகப்படுத்தும் மொச்சைப் பயிரை வழக்கமாக மாா்கழி மாத இறுதியில் அறுவடை செய்வது வழக்கம். வழக்கமாக ஒரு கிலோ ரூ. 25 முதல் 30 வரை விற்கும் மொச்சை தற்போது கிலோ ரூ.60 என சந்தையில் விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொச்சை பயிா் அதிக வரத்து இருக்கும். இதனால் விலை குறைவாக விற்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பெரிய அளவில் வரத்து இல்லாததால் கிலோ ரூ.30-க்கு விற்று வந்த மொச்சை பயிா் பொங்கலை ஒட்டி ரூ.60 க்கு விற்கப்படுகிறது. குறிப்பாக அறுவடை சமயத்தில் ஆள்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டு விட்டதால் விளைந்த மொச்சைப் பயிா்களையும் சந்தைக்கு கொண்டு வரமுடியவில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com