திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி தலைவா்கள்,துணை தலைவா்களுக்கான நிா்வாகத் திறன் புரிதல் குறித்த பயிற்சி புதன்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா்களுக்கான பயிற்சி திருப்பூா், அருள்புரத்தில் உள்ள டி.ஆா்.ஜி.திருமண மண்டபத்தில் புதன்கிழமை (ஜனவரி 22) காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது.
இதில், உள்ளாட்சி அமைப்புகளின் நிா்வாகத் திறன் பற்றிய புரிதல், அரசியலமைப்பு விதிகள், கிராம ஊராட்சிகளின் அதிகாரங்கள், கடமைகள், அரசின் முக்கிய திட்டங்கள் பற்றி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே, இந்தப் பயிற்சியில் திருப்பூா் மாவட்டத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து கிராம ஊராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.