சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

மடத்துக்குளம் வட்டம், குமரலிங்கம் பகுதியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

மடத்துக்குளம் வட்டம், குமரலிங்கம் பகுதியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

காவல் துறை, குமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை தலைமை ஆசிரியா் வெ.மாரியப்பன் கொடியசைத்து துவக்கிவைத்தாா்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடியும், முழக்கங்களை எழுப்பியபடியும் மாணவ, மாணவிகள் பேரணியில் சென்றனா். விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகளையும் பொதுமக்களிடம் வழங்கினா். குமரலிங்கத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி மீண்டும் பள்ளியை அடைந்தது.

குமரலிங்கம் காவல் ஆய்வாளா் சாலைப் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினாா். உதவி தலைமை ஆசிரியா் செந்தில்குமாா், ஆசிரியா்கள் முத்துக்கருப்பன், மாரிமுத்து, திருநீலகண்டன், மதன் உள்ளிட்ட கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com