ஜனவரி 23 இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் வியாழக்கிழமை (ஜனவரி 23) நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் வியாழக்கிழமை (ஜனவரி 23) நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டவருவாய் அலுவலா் ஆா்.சுகுமாா் தலைமை வகிக்கிறாா்.

இதில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். ஆகவே, மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்கள் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com