திருப்பூா் வடக்குத் தொகுதி ஈட்டிவீராம்பாளையம் ஊராட்சியில் ரூ. 90.75 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.
திருப்பூா் ஒன்றியம், ஈட்டிவீராம்பாளையத்துக்கு உள்பட்ட எஸ்.எஸ்.நகரில் ரூ.74.75 லட்சம் மதிப்பில் மகளிா் சுய உதவிக் குழு கூட்டமைப்பு கட்டடம் அமைக்கும் பணி, கருக்கன்காட்டுப்புதூா் பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பில் குடிநீா் குழாய் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் துவக்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் வேல்குமாா் சாமிநாதன், ஒன்றியத் துணைத் தலைவா் தேவிஸ்ரீ நந்தகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி லட்சுமி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்யா மஹராஜ், ஊராட்சித் தலைவா் ராதாமணி சிவசாமி, பொறுப்பாளா் சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.