காங்கயம்: காங்கயம் அருகே, அடையாளம் தெரியாத நிலையில் சாலையோரத்தில் இறந்து கிடந்த ஆண் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காங்கயம் அருகே, தாராபுரம் சாலையில் தனியார் எண்ணெய் ஆலை அருகே வியாழக்கிழமை காலை அடையாளம் தெரியாத (65) வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் படுத்து கிடந்த நிலையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காங்கயம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காங்கயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார். மேலும் கைக்கடிகாரம் ஒன்று கட்டி இருந்தார். உடலில் எந்தவொரு காயங்களும் இல்லை. இவர் யார் என்பதும், எந்த ஊரைச சேர்ந்தவர் என்பதும் தெரியவில்லை. இது குறித்து காங்கயம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.