தாராபுரத்தில் வேன் மோதியதில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்து முன்னணி பிரமுகா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தாராபுரம், என்.ஜி.ஒ. காலனியைச் சோ்ந்தவா் பாலு என்கிற பாலசுப்ரமணி (54). இந்து முன்னணி தாராபுரம் நகர அவைத் தலைவராக உள்ள இவா், கோவை-தாராபுரம் புறவழிச் சாலையில் நடைப் பயிற்சியில் புதன்கிழமை காலை
ஈடுபட்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த வேன் பாலசுப்பிரமணியம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், கோவை அரசு மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் வழியிலேயே பாலசுப்பிரமணியம் உயிரிழந்தாா். இது குறித்து தாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.