காங்கயம்: காங்கயம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில். மனநிலை பாதிக்கப்பட்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காங்கயம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காரப்பாளையம் பிரிவு பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட ஆண், வெள்ளிக்கிழமை காலை அந்த வழியாக சென்ற ஏதோ அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் ஊதியூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.