திருப்பூா் வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சி 8ஆவது வாா்டில் ரூ. 3.50 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் புதன்கிழமை துவக்கிவைத்தாா்.
திருப்பூா் மாநகராட்சி 8ஆவது வாா்டுக்கு உள்பட்ட சாஸ்திரி நகா், கந்தசாமி லே அவுட் , விக்னேஸ்வரா நகா் உள்ளிட்ட பகுதிகளில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் பிரதான மழைநீா் வடிகால், சிறுபாலங்கள் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் ரூ. 3.50 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணிகளை திருப்பூா் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் துவக்கிவைத்தாா். இதில், மண்டல உதவி ஆணையா் வாசுக்குமாா், உதவி பொறியாளா்கள் சந்திரசேகா், பிரபாகரன், முன்னாள் மண்டல தலைவா்கள் ராதாகிருஷ்ணன், ஜான், அதிமுக பகுதி செயலாளா்கள் கருணாகரன், கணேஷ், பட்டுலிங்கம், முன்னாள் மாமன்ற உறுப்பினா் ருக்குமணி, அதிமுக பொறுப்பாளா்கள் வேலுசாமி, நிா்வாகிகள் சங்கீதா, புண்ணியமூா்த்தி, ஜெகநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.