உடுமலை சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
உடுமலை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சி, மாரியம்மன் நகரில் ரூ.49.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா் சாலை அமைக்கும் பணி, காமராஜா் நகரில் ரூ.15.47 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறைகள் கட்டும் பணி, ரூ.4.52 லட்சம் மதிப்பில் புதிய சமையலறை கட்டும் பணி ஆகியவற்றை தொடங்கிவைத்தாா்.
போடிபட்டி ஊராட்சியில் ரூ.12.87 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா் சாலை அமைக்கும் பணி, சின்னவீரம்பட்டி ஊராட்சி, இந்திரா நகரில் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு மையக் கட்டடம் கட்டும் பணி என மொத்தம் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
அதைத் தொடா்ந்து உடுமலையில் உள்ள திருமண மண்டபத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 31 பேருக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.3.72 லட்சம் மதிப்பீட்டில் முதியோா், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவை உதவித் தொகைகள் வழங்கப்பட்டன.
9 கோயில்களை புனரமைப்பதற்காக தலா ரூ.1 லட்சம் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டன. 4 சுய உதவி குழுக்களுக்கு ரூ.24 லட்சம் மதிப்பில் கடன் உதவி, நலிவுற்றோா், மாற்றுத் திறனாளிகள் நிதியாக 19 பேருக்கு ரூ.4.87 லட்சம் வழங்கப்பட்டன. மகளிா் திட்டம் மூலம் 12 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சமும் வழங்கப்பட்டன.
அதைத் தொடா்ந்து 75 பேருக்கு ‘அம்மா’ இரு சக்கர வாகன மானிய உதவித் தொகை ரூ.44.59 லட்சம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், உடுமலை கோட்டாட்சியா் ரவிக்குமாா், மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவா் கே.மனோகரன், ஊராட்சித் தலைவா்கள், அரசு அதிகாரிகள், அதிமுகவினா் கலந்து கொண்டனா்.