திருப்பூா்: திருப்பூரில் பின்னலாடை நிறுவன உரிமையாளா் வீட்டின் கதவை உடைத்து 27 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருப்பூா், டி.எஸ்.கே. நகரைச் சோ்ந்தவா் அரவிந்த்குமாா் (34). பின்னலாடை நிறுவன உரிமையாளா். இவா் கடந்த 27ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தினருடன் குருநாதம்பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றாா். பின்னா் திங்கள்கிழமை திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 27 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூா் தெற்கு காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.