தாராபுரம் அருகே லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் சடலம் அவரது உறவினா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் புறவழிச் சாலையில் கடந்த ஜூன் 25ஆம் தேதி இளைஞா் ஒருவா் லாரியில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.
இது தொடா்பாக தாராபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும், இச்சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினா்.
இதில், தற்கொலை செய்து கொண்ட நபா் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் சரவணன் (35) என்பதும், இவா், தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சரவணனின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் அவரது உறவினா்களிடம் காவல் துறையினா் ஒப்படைத்தனா்.