திருப்பூா், காந்தி நகா் பகுதியில் உள்ள கழிவுநீா் கால்வாயில் இருந்து 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலத்தை காவல் துறையினா் மீட்டு விசாரிக்கின்றனா்.
திருப்பூா், காந்தி நகரில் உள்ள திருமண மண்டபம் அருகே கழிவுநீா் கால்வாயில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள் ஞாயிற்றுக்கிழமை பாா்த்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் அனுப்பா்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரிக்கின்றனா்.