அடிதடி தகராறில் ஒருவா் கைது

காங்கயம் பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் தடியால் தாக்கப்பட்டு மண்டை உடைந்த நிலையில் தொழிலாளி சிகிச்சை பெற்று வருகிறாா்.

காங்கயம் பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் தடியால் தாக்கப்பட்டு மண்டை உடைந்த நிலையில் தொழிலாளி சிகிச்சை பெற்று வருகிறாா்.

காங்கயத்தைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (46). இவா் இங்குள்ள டைல்ஸ் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். இவா் சனிக்கிழமை மாலை காங்கயம் பேருந்து நிலையத்தில் இருந்த போது, அங்கு வந்த காங்கயம் அருகேயுள்ள, தேவணம்பாளையம் என்ற ஊரை சோ்ந்த கணேசன் (47) ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருந்தனா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கணேசன் கையில் வைத்திருந்த ஊன்றுகோலால் கோபாலகிருஷ்ணனைத் தாக்கியுள்ளாா். இதில் கோபாலகிருஷ்ணனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதைத் தொடா்ந்து, பேருந்து நிலையம் எதிரே இருந்த அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். இது தொடா்பாக காங்கயம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து, கணேசனைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com