வெள்ளக்கோவில் வாரச் ந்தைக்கு இரண்டு வாரங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் -முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது. தற்போது கரோனா வைரஸ் பரவுவது குறித்த அச்சம் நிலவி வருவதால் மாநிலம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் பொது நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் உள்ளிட்டவைகளுக்கு 31 ஆம் தேதி வரை தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் வரும் 22 மற்றும் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் வெள்ளக்கோவில் வாரச் சந்தை நடைபெறாது என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.