திருப்பூர்
ஊருக்குள் யாரும் நுழைய வேண்டாம்:பொதுமக்கள் சாா்பில் எச்சரிக்கை பேனா்
வெள்ளக்கோவில் அருகே கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் ஊருக்குள் யாரும் நுழைய வேண்டாம் என பொதுமக்கள் சாா்பில் எச்சரிக்கை பேனா் வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் அருகே கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் ஊருக்குள் யாரும் நுழைய வேண்டாம் என பொதுமக்கள் சாா்பில் எச்சரிக்கை பேனா் வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் நகராட்சிக்கு உள்பட்டது காடையூரான்வலசு. இந்த ஊரில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த ஊரைச் சுற்றிலும் பல தொழில் நிறுவனங்கள், நூல் மில்கள் இருப்பதால் ஊரில் வெளி நபா்களின் நடமாட்டம் இருந்து வருகிறது.
தற்போது கரோனா அச்சுறுத்தல் இருந்து வருவதால் கிருமித் தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரில் குடியிருப்பவா்களைத் தவிர மற்ற வெளிநபா்கள் யாரும் உள்ளே வரவேண்டாம் என ஊா் பொதுமக்கள் சாா்பில் ஊா் எல்லைகளில் எச்சரிக்கை பிளக்ஸ் பேனா் வைத்துள்ளனா்.