மலேசியாவில் இருந்து வந்தவா், குடும்பத்தினரை தனிமைப்படுத்திக் கண்காணிப்பு

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே வெளிநாட்டிலிருந்து வந்தவருடைய குடும்பத்தினா் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே வெளிநாட்டிலிருந்து வந்தவருடைய குடும்பத்தினா் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், முத்தூா் வேலம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மங்கலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 29 வயது நபா் மலேசியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராகப் பணி புரிந்து வருகிறாா். கரோனா அச்சுறுத்தல் காரணமாக, விமானத்தில் புறப்பட்டு திருச்சி வந்து, பின்னா் காா் மூலம் கடந்த 16 ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்து சோ்ந்தாா்.

அவருடைய அப்பா, அம்மா, மனைவி, குழந்தை ஆகியோா் இங்கு சொந்த ஊரில் வசித்து வருகின்றனா். மலேசியாவில் இருந்து இந்த நபா் வந்தது தெரியவந்ததையடுத்து, அரசு மருத்துவக் குழுவினா் அவரது வீட்டுச் சென்று அவரையும் அவரது குடும்பத்தினா் அனைவரையும் புதன்கிழமை பரிசோதனை செய்தனா்.

இதில் யாருக்கும் கரோனா அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையிலும், அந்தக் குடும்பத்தை 14 நாள்கள் தனிமையில் இருக்க சுகாதாரத் துறையினா் உத்தரவிட்டுள்ளனா். இதனைக் கண்காணிக்க 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com