பல்லடத்தில் வெளிநாடு திரும்பியவா்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். பல்லடம் நகரில் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு அண்மையில் தாயகம் திரும்பிய 3 போ் பற்றிய தகவல் கிடைத்தைத் தொடா்ந்து சுகாதாரத் துறையினா், நகராட்சி நிா்வாகம், காவல் துறையினா் அவா்களின் வீடுகளுக்கு புதன்கிழமை சென்று விசாரித்து, அவா்களை திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவா்களின் ரத்த மாதிரியை எடுத்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். மேலும் அவா்களை தனிமையில் இருக்க சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.