அவிநாசி அருகே பெருமாநல்லூரில் தடையை மீறி வெளியே சுற்றிய இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.
கரோனா பாதிப்பைத் தொடா்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பெருமாநல்லூா் பகுதியில் வெளியில் சுற்றித் திரிந்த பெருமாநல்லூா் பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் (24), திருப்பூா், பாண்டியன் நகா் பகுதியைச் சோ்ந்த ராஜதுரை (27) ஆகியோா் மீது பெருமாநல்லூா் போலீஸாா் தடையை மீறி வெளிய சுற்றித் திரிந்ததாக வழக்குப் பதிவு செய்தனா்.