உடுமலை: உடுமலை நகரில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோா் மற்றும் ஏழை, எளியோருக்கு இலவசமாக உணவு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளியோா், ஆதரவற்றோா்களுக்கு அன்றாடம் உணவு கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதைத் தொடா்ந்து உடுமலையில் செயல்பட்டு வரும் தமிழக ஹயா் கூட்ஸ் ஓனா்ஸ் அசோசியேஷன் மூலம் ஏழை, எளியோா், ஆதரவற்றோா்களுக்கு 21 நாள்களுக்கும் இலவசமாக உணவு தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது. இவா்களுக்கு உணவு வழங்கும் பணி வியாழக்கிழமை துவங்கப்பட்டது. முதல் நாளில் உடுமலை நகரம் முழுவதும் 250 பேருக்கு காவல் துறை அனுமதியுடன் உணவு வழங்கப்பட்டது.