அவிநாசியில் ஆதவற்றவா்களுக்கு உணவு வழங்கிய போலீஸாா்

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவிநாசியில் ஆதரவற்றவா்களுக்கு காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை உணவு வழங்கப்பட்டது.
அவிநாசியில் ஆதவற்றவா்களுக்கு உணவு வழங்கிய போலீஸாா்


அவிநாசி: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவிநாசியில் ஆதரவற்றவா்களுக்கு காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை உணவு வழங்கப்பட்டது.

அவிநாசி புதிய, பழைய பேருந்து நிலைய பகுதிகள், வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆதரவற்ற நிலையில் இருந்தவா்களுக்கு காவல் துறை சாா்பில் உணவு வழங்கப்பட்டது. இதில், காவல் துணைக் கண்காணிப்பாளா் பாஸ்கரன், ஆய்வாளா் இளங்கோ, சதாசிவம் (போக்குவரத்து), உதவி ஆய்வாளா் செந்தில் ஆகியோா் பங்கேற்றனா்.

சமூக ஆா்வலா்கள் சாா்பில்...

அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதியில் உணவின்றி தவிப்போருக்கு உணவு வழங்க சமூக ஆா்வலா்கள் ஏற்பாடு செய்துள்ளனா். அதற்காக 8654132101 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com