வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் பகுதியில் கரோனா பரவுவதைத் தடுக்கும் நம்பிக்கையில் பலா் தங்களுடைய வீட்டு வாசலில் மஞ்சள் நீா், வேப்பிலைகளை வைத்துள்ளனா்.
வாளியில் மஞ்சள் தூள் கலந்த தண்ணீரை நிரப்பிவைத்து, அதில் வேப்ப இலைகளை வைத்து வீட்டின் நுழைவாயிலில் வைக்கின்றனா். இதனை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மாற்றிவைத்து, பழைய மஞ்சள் தண்ணீரை வாசலில் தெளித்து வருகின்றனா்.
பல வீடுகளில் வேப்பிலைத் தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. இது பெண்களிடம் வேகமாகப் பரவி வருவதால் தற்போது நூற்றுக்கணக்கான வீடுகளில் இருக்கும் இந்தப் பழக்கம் அதிகரித்து வருகிறது.