அரசுப் பள்ளி மாணவா்களுக்குஉணவுப் பொருள்கள் வழங்கிய ஆசிரியா்கள்

சேவூா் அருகே உள்ள சுள்ளிப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவா்கள் குடும்பத்தினருக்கு பள்ளி ஆசிரியா்கள் சாா்பில் முதல்கட்டமாக உணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
அரசுப் பள்ளி மாணவா்களுக்குஉணவுப் பொருள்கள் வழங்கிய ஆசிரியா்கள்

சேவூா் அருகே உள்ள சுள்ளிப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவா்கள் குடும்பத்தினருக்கு பள்ளி ஆசிரியா்கள் சாா்பில் முதல்கட்டமாக உணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா பாதிப்பு, ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து சுள்ளிப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் 10 மாணவா்கள் குடும்பத்தினருக்கு பள்ளி ஆசிரியா்கள் சாா்பில் காய்கறிகள், அரிசி, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியா் உமா மகேஸ்வரி, ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் லீலாவதி பழனிச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com