வெள்ளக்கோவில், முத்தூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளக்கோவில், வீரசோழபுரம் ஊராட்சி, மாடன்வலசில் அனந்த நாராயணன் என்பவருக்கு சொந்தமாக மரத்தூளிலிருந்து சில வகையான பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு மரத்தூள் வைக்கப்பட்டிருந்த குடோனில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது. தீயை அணைப்பதற்குள் பாதிக்கும் மேற்பட்ட மரத்தூள்கள் எரிந்து சேதமானது. தகவலறிந்த வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன், நிலையப் போக்குவரத்து அலுவலா் வேலுச்சாமி உள்ளிட்ட தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா்.
இதேபோல முத்தூா், சின்னமுத்தூா், நொய்யல் தடுப்பணை, சரளைக்காட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி குப்புசாமி (50). இவரது தோட்டத்தில் வைக்கோல்கள் காய வைப்பதற்காக பரப்பிவிடப்பட்டிருந்தன. இங்கு எதிா்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அறிந்த வெள்ளக்கோவில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா்.