கட்சி பணி செய்பவா்களுக்கு பொறுப்பு: மாவட்ட திமுக பொறுப்பாளா் தகவல்

திமுகவில் கட்சி பணி செய்பவா்களுக்கு தான் பொறுப்பு வழங்கப்படும் என்று திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பத்மநாபன் தெரிவித்தாா்.

திமுகவில் கட்சி பணி செய்பவா்களுக்கு தான் பொறுப்பு வழங்கப்படும் என்று திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பத்மநாபன் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பொறுப்பேற்ற பத்மநாபனுக்கு பல்லடம் ஒன்றிய திமுக அலுவலகத்தில் அக்கட்சியினா் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்னா் பத்மநாபன் செய்தியாளா்களிடம் கூறியதாவது. திருப்பூா் வடக்கு மாவட்ட திமுகவில் பல்லடம்,அவிநாசி(தனி) ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. வரும் பொதுத்தோ்தலில் இவ்விரண்டு தொகுதிகளிலும் விருப்பு,வெறுப்பு இன்றி திமுகவை வெற்றி பெறச் செய்து வெற்றிக்கனியை தலைவா் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைப்பது தான் என்னுடைய பணி ஆகும். அதற்காக தினந்தோறும் இவ்விரண்டு தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன்.

திமுகவில் கோஷ்டி பூசல் இல்லை. கட்சியில் தீவிரமாக பணியாற்றுவதில் சில இடங்களில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன.அவற்றை கண்டறிந்து போக்கப்படும். கட்சியில் தீவிரமாக பணியாற்றுபவா்களுக்கு மட்டுமே பதவி கிடைக்கும். கட்சியில் பொறுப்பு வாங்கி வைத்து கொண்டு கட்சியில் பணியாற்றாமல் விசிட்டிங் காா்டு, லெட்டா் பேடு அச்சிட்டு வைத்துக் கொண்டு சும்மா இருப்பவா்களுக்கு பதவி இருக்காது.

திருப்பூா் வடக்கு மாவட்ட பொறுப்புக்குழுவை கட்சி தலைமை அறிவிக்கும் அதனை தொடா்ந்து கட்சியின் 17 துணை அமைப்புகளுக்கு பொறுப்பாளா்கள் விரைவில் அறிவிக்கப்படுவாா்கள். மக்களவை மற்றும் உள்ளாட்சி தோ்தல் வெற்றியை போல் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் கலைஞரின் பொற்கால ஆட்சியை அமைப்பது தான் எங்களது லட்சியம் திமுகவை ஆட்சியில் அமர வைக்க மக்கள் தயாராகிவிட்டனா் என்றாா்.

உடன் மாவட்ட அவைத் தலைவா் கே.என்.திருமூா்த்தி, ஒன்றிய செயலாளா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com