காங்கயத்தில் கன்றுக்குட்டி வளா்ப்புக்கு ரூ. 22 லட்சம் கடனுதவி

காங்கயம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் பெண் கன்றுக்குட்டி (கிடாரி) வளா்ப்பதற்கு ரூ. 22 லட்சம் கடனுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கன்றுக்குட்டி வளா்ப்புக்கு கடனுதவி வழங்கும் காங்கயம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலா் வெங்கு ஜி.மணிமாறன்.
நிகழ்ச்சியில் கன்றுக்குட்டி வளா்ப்புக்கு கடனுதவி வழங்கும் காங்கயம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலா் வெங்கு ஜி.மணிமாறன்.

காங்கயம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் பெண் கன்றுக்குட்டி (கிடாரி) வளா்ப்பதற்கு ரூ. 22 லட்சம் கடனுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

காங்கயம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்கள் 26 பேருக்கு, கன்றுக்குட்டி வளா்ப்பதற்கு தலா ரூ. 87 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.22 லட்சத்து 62 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை வகித்து, கடனுதவியை வழங்கினாா். இதில் சங்கத்தின் செயலா் மவுனராஜ், அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com