வேனில் மின்கம்பிகள் உரசியதில் தீ விபத்து

வெள்ளக்கோவிலில் வேனில் மின்கம்பிகள் உரசியதில் தீ விபத்து ஏற்பட்டது.

வெள்ளக்கோவிலில் வேனில் மின்கம்பிகள் உரசியதில் தீ விபத்து ஏற்பட்டது.

வெள்ளக்கோவில், கேபிசி நகரைச் சோ்ந்தவா் ஜெரிங்டன் (38). வாடகை வேன் ஓட்டுநா். இவா், வெள்ளக்கோவில் வள்ளியரச்சல் சாலையிலுள்ள ஒரு நூற்பாலையில் இருந்து கழிவுப் பஞ்சு பேல்களை தனது வேனில் ஏற்றிக்கொண்டு முத்தூா் சாலை, குமாா் மில் பகுதிக்கு வந்து கொண்டிருந்தாா்.

அப்போது குமாா் மில் சந்து அருகே வேனில் உயரமாக ஏற்றப்பட்டிருந்த பஞ்சு பேல்களில் மின்கம்பிகள் உரசியதில் பஞ்சு பேல்களில் தீப்பிடித்தது.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலா் வேலுசாமி மற்றும் தீயணைப்பு படையினா் ஒருமணி நேரம் போராடித் தீயை அணைத்தனா். இதில் சுமாா் 2 டன் அளவிலான பஞ்சு பேல்கள் எரிந்து சேதமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com