காங்கயம் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

காங்கயம் அருகே பாலம் கட்டும் பணி நடைபெற்றுவரும் பள்ளத்தில் கோழிக் கழிவுகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காங்கயம் அருகே சாலையின் நடுவே பாலம் கட்டும் பணி நடைபெற்றுவரும்  பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி.
காங்கயம் அருகே சாலையின் நடுவே பாலம் கட்டும் பணி நடைபெற்றுவரும் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி.

காங்கயம்: காங்கயம் அருகே பாலம் கட்டும் பணி நடைபெற்றுவரும் பள்ளத்தில் கோழிக் கழிவுகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நாமக்கல் மாவட்டத்திலிருந்து கோழிக் கழிவுகளை ஏற்றிக் கொண்டு, காங்கயம் அடுத்துள்ள அவிநாசிபாளையத்தை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. நாமக்கல் மாவட்டம், செந்தாமங்கலம் பகுதியைச் சேர்ந்த விஜயன் (29) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். இந்த லாரி வியாழக்கிழமை அதிகாலை 2  மணிக்கு காங்கயம் - முத்தூர் சாலை பச்சாபாளையம் அருகே சென்ற போது, திடீரென சாலையின் நடுவே நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், லாரி எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை  இழந்து, சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது மோதி, பின்னர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து வந்த காங்கயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு வந்து, லாரின் முன்பக்க மேல்பகுதியில் துளையிட்டு உள்ளே சென்று, 2 மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் லாரிக்குள் சிக்கியிருந்த டிரைவர் விஜயனை மீட்டனர்.            

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com