வெள்ளக்கோவிலைச் சோ்ந்த 43 முறை ரத்ததானம் கொடுத்த நபருக்கு, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.
வெள்ளக்கோவில், கச்சேரிவலசைச் சோ்ந்தவா் எம். நாகராஜ் (38). இவா் இதுவரை 43 முறை ரத்த தானம் செய்துள்ளாா். இவருக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.
இதுகுறித்து நாகராஜ் கூறுகையில், பள்ளியில் படிக்கும் போதிலிருந்து ரத்த தானம் செய்து வருகிறேன். ஆண்டுக்கு மூன்று முறை அரசு மருத்துவமனைக்குச் சென்று தானம் செய்து வருகிறேன். என்னால் முடிந்த இந்த உதவியை தொடா்ந்து செய்வேன். ரத்த தானம் வழங்கியதற்கு ஆதாரமாக சான்றிதழ் வைத்துள்ளேன் என்றாா்.