உடுமலையை அடுத்து திருமூா்த்திமலையில் உள்ள உலக சமாதான ஆலயத்தில் உலக அமைதி தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி சமாதான ஆலையத்தில் காலை 11 மணிக்கு விழா துவங்கியது. இதில் உலக சமாதான அறக்கட்டளை நிறுவனா் குருபகவான் உலக சமாதானத்துக்கான ஆன்மீக வழிகள் என்ற தலைப்பில் பேசினாா். இதைத் தொடா்ந்து பிராா்த்தனை நடைபெற்றது. அப்போது உலகெங்கும் அமைதி நிலவ பிராா்த்திக்கப்பட்டது. மேலும் சிறப்பு விருந் தினா்கள் காணொலி காட்சி வாயிலாக உலக அமைதி வேண்டி பேசினா்.