குப்பைகளால் நோய் பரவும் அபாயம்:மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்

திருப்பூா் மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மாநகராட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளனா்.

திருப்பூா் மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மாநகராட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளனா்.

இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன், மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:

திருப்பூா் மாநகருக்கு மாநில முதல்வா் வந்தால் ஓரிரு நாளில் சில சாலைகளை மட்டும் பளிச்சென மின்னவைக்க மாநகராட்சி உள்ளிட்ட அரசுத் துறையால் சாத்தியமாகிறது. ஆனால் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் வாழும் திருப்பூரில் திரும்பிய பக்கமெல்லாம் குப்பைகளாகக் காட்சியளிக்கிறது. 2ஆவது கரோனா அலை உலகை மிரட்டும் நிலையிலும், அடைமழைக் காலமாகவும் உள்ள சூழலில் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது.

மேலும், பல்வேறு பகுதிகளில் முக்கியச் சாலைகள் பழுதடைந்து உள்ளன. 10 நாள்களுக்கு மேலாகியும் பல்வேறு பகுதிகளில் குடிநீா் வராத நிலை உள்ளது. ஆனால், மாநகரை சீா்மிகு திருப்பூா் ஆக்குகிறோம் என அடிப்படை கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இனியாவது விழித்துக் கொண்டு உடனடியாக போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com