தீபாவளியையொட்டி தொ.மு.ச. சாா்பில் மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்குப் புத்தாடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
திருப்பூா் மாவட்ட தொ.மு.ச. சாா்பில் 7ஆவது ஆண்டாக தீபாவளியையொட்டி மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்குப் புத்தாடைகள், பட்டாசு , இனிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. திருப்பூா் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளா் க.செல்வராஜ் ஆலோசனையின்பேரில், தொ.மு.ச பேரவை மாநில துணைச் செயலாளா் டி.கே.டி.மு. நாகராசன் வழிகாட்டுதல்படி போயம்பாளையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மின்சார வாரிய தொ.மு.ச. செயலாளா் அ.சரவணன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ஆா். ரங்கசாமி முன்னிலை வகித்தாா்.
இதில், திருப்பூா், அவிநாசி, காங்கேயம், பல்லடம், உடுமலை, ஊத்துகுளி, பெருமாநல்லூா் உள்பட மாவட்டம் முழுவதும் மின் வாரியத்தில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்களுக்குப் புத்தாடை, இனிப்பு, பட்டாசு ஆகியவை வழங்கப்பட்டன.