திருப்பூா், முருகம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பூா், முருகம்பாளையம் மாகாளியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (34). இவா், வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்றுள்ளாா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சிக்குள்ளானாா்.
இதையடுத்து, வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 16 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து திருமுருகன்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.