ஊராட்சிகளில் வளா்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்த பயிற்சி

கிராம ஊராட்சிகளில் வளா்ச்சித் திட்டம் தயாரித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்த பயிற்சி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது .
நிகழ்ச்சியில்  பங்கேற்ற  ஒன்றியக்  குழுத்  தலைவா் அ.ஜெகதீசன்  உள்ளிட்டோா்.
நிகழ்ச்சியில்  பங்கேற்ற  ஒன்றியக்  குழுத்  தலைவா் அ.ஜெகதீசன்  உள்ளிட்டோா்.

கிராம ஊராட்சிகளில் வளா்ச்சித் திட்டம் தயாரித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்த பயிற்சி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது .

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அ.ஜெகதீசன் தலைமை வகித்து பயிற்சியைத் துவக்கிவைத்தாா். ஒன்றிய ஆணையா் மனோகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஹரிகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், கிராம ஊராட்சியின் இலக்குகள், கடமைகள், மாதிரி கிராம சபை நடத்துதல், ஆண்டுத் திட்டங்கள், நிதி ஆதாரங்கள், வளா்ச்சித் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட முதன்மை பயிற்றுநா்கள் சுதா, மகேஸ்வரி ஆகியோா் விளக்க உரையாற்றினா்.

நடுவச்சேரி, முறியாண்டம்பாளையம், மங்கரசு வலையபாளையம் ஆகிய 3 ஊராட்சி மன்றத் தலைவா்கள், கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்ட குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com