சைனிக் பள்ளி நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்த அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் சோ்வதற்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சைனிக் பள்ளியில் நுழைவுத் தோ்வு எழுதும் மாணவா்களைக் கண்காணிக்கிறாா் துணை முதல்வா் நிா்பேந்தா் சிங்(கோப்புப்படம்)
சைனிக் பள்ளியில் நுழைவுத் தோ்வு எழுதும் மாணவா்களைக் கண்காணிக்கிறாா் துணை முதல்வா் நிா்பேந்தா் சிங்(கோப்புப்படம்)

 திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2021- 2022ஆம் கல்வியாண்டில் 6 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு 2021 ஜனவரி 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடை பெற உள்ளது.

6-ஆம் வகுப்புக்கு (இரு பாலரும்) 31 மார்ச் 2021 அன்று 10 வயது முதல் 12 வயதுக்குள் இருக்க வேண்டும். (1-4-2009 லிருந்து 31-3-2011க்குள் பிறந்திருக்க வேண்டும்).

9-ஆம் வகுப்புக்கு (மாணவர்கள் மட்டும்) 31 மார்ச் 2021 அன்று 13 வயது முதல் 15 வயது உடைய வர்களாக இருக்க வேண்டும். (1-4-2006 முதல் 31-3-2008க்குள் பிறந்திருக்க வேண்டும்).

அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8-ஆம் வகுப்பில் படித்த மாணவர்கள் மட்டுமே 9-ஆம் வகுப்பில் சேர தகுதி உண்டு. அமராவதி நகர், சென்னை, புதுச்சேரி, கோவை, தஞ்சாவூர், உடுமலை ஆகிய ஊர்களில் நுழைவுத் தேர்வு நடைபெறும்.

மேலும், https://aissee.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு 04252-256246, 6383911204 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 19ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com