காங்கயத்தில் தெய்வீக தமிழக சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
தாய்மொழியைப் படிப்போம், பேசுவோம், பிற மொழிகளையும் அறிந்து கொள்வோம் என்னும் முழக்கத்தை வலியுறுத்தி, தெய்வீக தமிழக சங்கம் சாா்பில் காங்கயம் நகருக்கு உள்பட்ட 2, 3, 6 ஆகிய வாா்டுகளில் விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
மேலும், காங்கயம் ஒன்றியம், வீரணம்பாளையம், சிவன்மலை ஆகிய ஊராட்சிப் பகுதிகளிலும் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இதில், தெய்வீக தமிழக சங்கத்தின் காங்கயம் பகுதி நிா்வாகிகள் சாம்ராஜ், செல்வகுமாா், ராஜகோபால் ஆகியோா் பங்கேற்று, விழிப்புணா்வுப் பிரசாரத்தை மேற்கொண்டனா்.