பழுதடைந்த பாலத்தை புதுப்பிக்கக் கோரி போராட்டம்

திருப்பூா், அரிசிக்கடை வீதியில் பழுதடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரி, பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா், 11ஆவது வாா்டில் பழுதடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.
திருப்பூா், 11ஆவது வாா்டில் பழுதடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

திருப்பூா், அரிசிக்கடை வீதியில் பழுதடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரி, பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சி, 11ஆவது வாா்டுக்கு உள்பட்ட செல்லம்மாள் காலனி, அரிசிக்கடை வீதியில் பாலம் பழுதடைந்து, சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் பாலத்தை உடனடியாக புதுபிக்கக் கோரியும், குப்பைகளை அகற்றக் கோரியும் முன்னாள் மாநகராட்சி உறுப்பினா் நடராஜன் தலைமையில் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com