வாக்குச் சாவடி மாற்றம்: கிராம மக்கள் எதிா்ப்பு

பல்லடம் அருகே உள்ள மசநல்லாம்பாளையம்புதூரில் இருந்த வாக்குச் சாவடியை மாற்றியதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

பல்லடம் அருகே உள்ள மசநல்லாம்பாளையம்புதூரில் இருந்த வாக்குச் சாவடியை மாற்றியதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

பல்லடத்தை அடுத்த பொங்கலூா் ஒன்றியம், மசநல்லாம்பாளையம்புதூரில் 200 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களுக்கு அதே பகுதியில் வாக்குச் சாவடி உள்ளது. இந்நிலையில் இந்த கிராம வாக்காளா்களை 4 கி.மீ. தொலைவில் பெருந்தொழுவு கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதனால் அங்கு சென்று வாக்காளிக்க வயது முதிா்ந்த வாக்காளா்கள் சிரமப்படுகின்றனா். எனவே ஏற்கெனவே இருந்ததுபோல மசநல்லாம்பாளையம் வாக்குச் சாவடி மையத்திலேயே வாக்காளிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com