அவிநாசி: திருப்பூா் மாநகராட்சி 16ஆவது வாா்டு பாண்டியன் நகா் செளண்டம்மன் கோயில் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இது குறித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:
இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனா். இப் பகுதியில் சாக்கடை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக அடிப்படை வசதிகளை சீரமைத்துத் தர வேண்டும் என்றனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருமுருகன்பூண்டி போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இது குறித்து மாநகராட்சி நிா்வாகத்திடம் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து, அவா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.