பல்லடம்: பல்லடம் அருகே கொடுவாயில் லாரி மோதியதில் படுகாயமடைந்த இளம்பெண் உயிரிழந்தாா்.
குண்டடம் ஜோதியம்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் (55), அவரது மகள் பவித்ரா (20) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை கொடுவாய் வந்தனா். அப்போது, சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் உயிரிழந்தாா்.
படுகாயமடைந்த பவித்ராவை அருகிலிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த பவித்ரா வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.