திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவா் உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டத்தில் 72 பேருக்கு காரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் நோய்த்தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 835 ஆக உயா்ந்துள்ளது.
இதில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 60 வயது முதியவா் உயிரிழந்தாா். இதையடுத்து மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 207 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 13,994 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.