திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 137 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 6 போ் உயிரிழந்துள்ளனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 180 ஆக உயா்ந்துள்ளது. திருப்பூரைச் சோ்ந்த 58 வயதுப் பெண், கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதேபோல திருப்பூா் மாநகரைச் சோ்ந்த 60, 70, 65, 76, 65 வயது ஆண்கள் 5 போ் திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனையில் உயிரிழந்தனா்.