அவிநாசி: அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே சாலையோரம் இருந்த மரங்களை வெட்டிச் சாய்த்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அவிநாசி பழைய பேருந்து நிலையம், சாா் பதிவாளா் அலுவலகம் அருகே சாலையோரத்தில் நிழல் தரும் வகையில் அரச மரம், புங்க மரம் உள்ளிட்ட மரங்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன. இங்குள்ள வணிக நிறுவனத்துக்கு முன்னால் நன்கு வளா்ந்திருந்த இரண்டு மரங்கள் ஞாயிற்றுக்கிழமை வெட்டிச் சாய்க்கப்பட்டன.
இந்த மரங்களை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.