பழையகோட்டை மாட்டுச் சந்தை மீண்டும் துவக்கம்

கரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பழையகோட்டை மாட்டுச் சந்தை மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்படத் துவங்கியது. முதல் நாளில் ரூ. 7.60 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனையாயின.
பழையகோட்டை காங்கேயம் இன மாட்டுச் சந்தையில் ரூ. 79 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட காங்கேயம் இன செவலைப் பசு.
பழையகோட்டை காங்கேயம் இன மாட்டுச் சந்தையில் ரூ. 79 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட காங்கேயம் இன செவலைப் பசு.

காங்கயம்: கரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பழையகோட்டை மாட்டுச் சந்தை மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்படத் துவங்கியது. முதல் நாளில் ரூ. 7.60 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனையாயின.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூா் பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன. கரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்தச் சந்தை கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மாட்டுச் சந்தை ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் செயல்படத் துவங்கியது. முதல் நாளில் நடைபெற்ற சந்தையில் காங்கேயம் இன மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 27 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 14 மாடுகள் மொத்தம் ரூ. 7 லட்சத்துக்கு 60 ஆயிரத்துக்கு விற்பனையாயின. இந்தச் சந்தையில் அதிக பட்சமாக ரூ. 79 ஆயிரத்துக்கு காங்கேயம் இன செவலை வகைப் பசு விற்பனையானது.

6 மாதங்களுக்குப் பின்னா் நடைபெற்ற சந்தை என்பதால் விற்பனைக்கு மாடுகள் குறைவான எண்ணிக்கையிலேயே கொண்டு வரப்பட்டிருந்தன. அடுத்தடுத்து நடைபெறும் சந்தைகளில் மாடுகளின் வரத்து அதிகம் இருக்கும் என சந்தை ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

இந்த சந்தையில் மாடு வளா்ப்போா், வியாபாரிகள் என அனைவரும் சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com