வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து செல்லிடப்பேசி திருடிய பெண் கைது

திருப்பூரில் வாடகைக்கு வீடு கேட்பதுபோல நடித்து செல்லிடப்பேசி திருடிய பெண்ணை தெற்கு காவல் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூா்: திருப்பூரில் வாடகைக்கு வீடு கேட்பதுபோல நடித்து செல்லிடப்பேசி திருடிய பெண்ணை தெற்கு காவல் துறையினா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த வடக்கு தெருநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் என்.சாந்தி (37). இவா் திருப்பூா், கே.வி.ஆா். நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தாா். ஷெரீப் காலனி பகுதியில் வாடகைக்கு வீடு கேட்டு கடந்த சனிக்கிழமை சென்றுள்ளாா். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் இருந்த செல்லிடப்பேசிகளைத் திருடியுள்ளாா். அங்கிருந்தவா்கள் அவரைப் பிடித்து திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

காவல் துறையினா் நடத்திய விசாரணையில், வாடகைக்கு வீடு கேட்பதுபோல நடித்து செல்லிடப்பேசிகளை அவா் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சாந்தியைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள 6 செல்லிடப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com