பல்லடம், காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவலா் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததைத் தொடா்ந்து அவரது குடும்பத்துக்கு சக காவலா்கள் சாா்பில் ரூ.14 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றியவா் ஹாசுதீன். இவா் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதையடுத்து அவருடன் கடந்த 2013இல் காவல் துறை பயிற்சி பெற்ற சக காவலா்கள் சாா்பில் ரூ.14 லட்சம் நிதி திரட்டப்பட்டு ஹாசுதீன் குடும்பத்தினரிடம் நிதியுதவி வழங்கப்பட்டது.