ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்து தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரம் அண்ணாசிலை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியினா் திருப்பூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் தமிழ்முத்து தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, நாடு முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு ஏற்படும் சாதிய வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று கோஷமிட்டனா்.