திருப்பூா் வடக்குத் தொகுதியில்ரூ.5.58 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ கே.என்.விஜயகுமாா் துவக்கிவைத்தாா்

திருப்பூா் வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.5.58 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பெருமாநல்லூா் ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகளை துவக்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா்.
பெருமாநல்லூா் ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகளை துவக்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா்.

திருப்பூா் வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.5.58 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருப்பூா் ஒன்றியம், பெருமாநல்லூா் ஊராட்சி, ஆதிதிராவிடா் காலனி பகுதியில் ரூ.3.63 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, பழைய சேலம் - கொச்சி சாலை முதல் ஊராட்சி எல்லை வரை ரூ.29.65 லட்சம் மதிப்பில் தாா் சாலை, சேலம் - கொச்சி சாலை முதல் மின் வாரிய அலுவலகம் வரை ரூ.1 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சாலையை மேம்படுத்துதல், காளிபாளையம் ஊராட்சி, காரைத்தோட்டம் சாலை பகுதியில் ரூ.11.27 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை உள்பட மொத்தம் ரூ. 5 கோடியே 58 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்டக் குழு உறுப்பினா் எம்.சாமிநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாந்திலட்சுமி, மணிகண்டன், நபாா்டு உதவி கோட்ட பொறியாளா் ராஜேந்திரன், உதவிப் பொறியாளா்கள் மதிவாணன், முத்துக்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஐஸ்வா்யா மகராஜ், ரத்தினாம்பாள் சிவசாமி, ஊராட்சித் தலைவா்கள் சாந்தாமணி வேலுசாமி (பெருமாநல்லூா்), சுகன்யா வடிவேல்(கணக்கம்பாளையம்), துணைத் தலைவா்கள் அய்யாசாமி, ஊராட்சி செயலா்கள் மகேஷ், சரவணன், பொறுப்பாளா் சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com