திருப்பூா் பின்னலாடை நிறுவனத் தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன், சங்க உறுப்பினா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தீபாவளி பண்டிகையை ஒட்டி தங்களது நிறுவனத்தில் பணியாற்றிவரும் தொழிலாளா்களுக்கு போனஸ் தொகையை விரைவாக வழங்க வேண்டும். அந்தந்த நிறுவனத்தின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு தொழிலாளா்களிடம் சுமூகமாகப் பேசி போனஸ் தொகையை வழங்க வேண்டும். கடந்த காலங்களைப் போல போனஸ் வழங்குவது குறித்து எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.